பெரம்பூர்: பொன்னேரியில் இருந்து வியாசர்பாடி நோக்கி நேற்று அதிகாலை 2 மணியளவில் டிப்பர் லாரி சென்றது. பேசின் பிரிட்ஜ் மேம்பாலத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. பின்னர் மேம்பால தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கீழே செல்லும் கூவம் கால்வாய்க்குள் தலைகுப்புற விழுந்தது. இதில் தண்ணீரில் லாரி மூழ்கியது. அதில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பேசின் பிரிட்ஜ், வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கால்வாய் ஓரத்தில் ராட்சத கிரேன் செல்ல வழியில்லாதால் லாரியை மீட் பதில் தாமதம் ஆனது. ராட்சத கிரேனை பாலத்தில் நிறுத்தி கால்வாயில் மூழ் கிய லாரியை மீட்கும் முயற்சியில் ஈடு பட்டனர். சேற்றில் சிக்கி இருந்ததால் லாரியை வெளியே எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்து அதில் சிக்கி இருந்த வாலிபர் உடலை மீட்டனர். அவர் யார்? எந்தப் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 30 வயது இருக்கும். மேலும் சிலர் கால்வாய்க்குள் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று போலிசார் சந்தே கிக்கிறார்கள். இதையடுத்து ரப்பர் படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
லாரியை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர். படம்: தமிழக ஊடகம்