மருத்துவ மாணவியின் கோரிக்கை

ஈரோடு: மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் படிக்க முடியாமல் ஏழை மாணவி ஒருவர் திண்டாடுகிறார். கல்லூரியில் சேர்ந்து படிக்க கல்லூரி கட்டணம், இதர கட்டணம் என ஆறு லட்ச ரூபாய் அவருக்குத் தேவைப்படுவதால் உதவி செய்யும்படி அந்த மாணவி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரோடு அருகே உள்ள வெள்ளோட்டை அடுத்த மைலாடி ஊரைச் சேர்ந்த சின்னசாமி என்ற விவசாய கூலி தொழிலாளியின் மகள் பிரித்தி, 18, கோபியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து +2வில் 1088 மதிப்பெண்கள் பெற்றார். இந்த நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ ஆராய்ச்சிக் கல்லூரியில் அவருக்கு எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது. இந்த நிலையில் மாணவி பிரித்தி நேற்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபாகரிடம் ஒரு மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் மருத்துவம் படிக்க ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. கூலித் தொழிலாளியான என் தந்தையால் பணத்தை புரட்டமுடியவில்லை. நான் படித்து டாக்டர் ஆகிவிட்டால் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பேன். என்னுடைய மருத்துவப் படிப்புக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்," என்று பிரித்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!