ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய வர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடையநல்லூரில் கைது செய்யப்பட்ட சுபுஹானி காஜா முகைதீன் ஈராக்கில் ஐஎஸ் இயக்கத்துடன் இணைந்து போர் புரிந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். கேரள மாநிலத்தில் கடந்த 2ஆம் தேதி ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் அறுவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவரான சுபுஹானியின் வாக்குமூலங்கள் மூலம் ஐஎஸ் அமைப்பின் செயல் பாடுகள், பயிற்சிகள், சமய வகுப்பு கள், நிதி சேர்ப்பு, போரில் பெண்களின் பங்கு போன்றவை குறித்து இந்திய தேசிய புலனாய்வுத் துறைக்கு புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த 60 பேர்களில் சுபுஹானியின் கைது மிக முக்கியமானது என மூத்த உள்துறை அதிகாரிகள் கூறியுள்ள னர். சுபுஹானி, ஐஎஸ்சின் செயல் பாட்டு முறைகளைத் தெரிந்த முக்கிய ஆள் எனக் கூறப்படுகிறது. சமூக இணையத்தளங்கள் மூலம் ஐஎஸ் இயக்கத்தினருடன் தொடர்பு கொண்ட சுபுஹானி ஈராக் சென்றார். தொடர்ந்து சிரியாவில் மூன்று மாத பயிற்சிக்குப் பின்னர் மொசூலில் தீவிர பயிற்சி பெற்றுதும் போர்க்களம் சென்றதாக சுபுஹானி விசாரணையில் கூறியுள்ளார். "உணவு, தங்க இடம் ஆகியவற்றுடன் மாதம் 100 அமெரிக்க டாலர் மானியமாகக் கொடுத்தனர்," என்றும் அவர் தெரிவித்தார். செப்டம்பர் மாதம் இஸ்தான்புல்லில் இருந்து மும்பை வந்துள்ளார்.
அங்கிருந்து திருநெல்வேலிக்கு வந்த சுபுஹானி ஐஎஸ் ஆதரவாளர்களுடன் இணைந்து தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்களில் தாக்குதல் நடத்தவும் முக்கிய பிரமுகர் களைக் கொல்லவும் திட்டமிட்டுள்ள தாக இந்திய தேசிய புலனாய்வுத் துறை கூறியது. வெடிகுண்டு தாக்குதல் நடத்த சிவகாசியில் வெடி பொருட்கள் வாங்கவும் முயன்றுள்ளார். இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். அத்துடன் கைதானவர்கள் அளித்த தகவல்களைத் தொடர்ந்து கோவையில் மேலும் 11 பேரைக் கைது செய்து தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.