போதைப்பொருள் கடத்தல்: நைஜீரியருக்கு ஈராண்டு சிறை

சென்னை: தபால் மூலம் போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவருக்கு ஈராண்டு சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. சென்னையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு நபர் ஒருவர் தென் ஆப்பிரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப் போவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலி சாருக்கு 2014ஆம் ஆண்டு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை அம்பத்தூர் தபால் அலுவலகம் அருகே அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஹென்றி சிதி (38) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தென் ஆப்பிரிக்காவுக்கு மூன்று பார்சல்களை அனுப்ப தாம் தபால் அலுவலகம் வந்ததாக அவர் கூறினார்.

அந்தப் பார்சல்களை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது, அதில் 'ஹெராயின்' போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, போலிசார் அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.ஜெஸ்டீன் டேவிட், குற்றவாளி ஹென்றி சிதிக்கு ஈராண்டு சிறையும் ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!