பெங்களூரு: பாலியல் தொழில் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் தமிழக கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி யின் உதவியாளர் சத்யா என்ப வரைப் பெங்களூரு போலிசார் கைது செய்துள்ளனர். அவருடன் மேலும் பத்துப் பேர் கைதாகியுள்ளனர் என்றும் அழகு நிலையம் என்ற பெயரில் இவர்கள் பல பெண்களைப் பாலி யல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபட வைத்துள்ளனர் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
42 வயதான சத்யா, பெங்க ளூருவில் உள்ள தனது நண்பர் களுடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப் படுகிறது. அழகு நிலையம் என்ற பெயரில் ஒரு வீட்டில் இளம் பெண்களைத் தங்கவைத்து, வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ள னர். இதுகுறித்து கிடைத்த ரகசி யத் தகவலின் பேரில் போலிசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற் கொண்டனர். அப்போது அங்கிருந்த சத்யா உள்ளிட்ட 11 பேரும் வகையாக சிக்கினர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்கள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.