வேலூர்: மதுவில் விஷம் கலந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றவரிடம் ஓசியில் மது வாங்கிக் குடித்தவர்களின் உயிர் ஊசலாடுகிறது. வேலூரைச் சேர்ந்த 23 வயதான சரத்குமார் குடும்பப் பிரச்சினை காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார். இதற்காக வெள்ளிக்கிழமை மதுபான மையம் சென்ற அவர், அங்கு வாங்கிய மதுவில் விஷம் கலந்து குடித்தார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர்கள் தங்களுக்கும் மது வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
அதற்கு, தான் அருந்தும் மதுவில் விஷம் கலந்திருப்பதாக சரத்குமார் கூறியும் அதை நம்பாத நண்பர்கள் இருவரும் அவர் பொய் சொல்வதாகக் கருதி மதுவைக் குடித்துள்ளனர். இதையடுத்து மயங்கி விழுந்த மூவரும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.