சென்னை: சட்டப்பேரவை இடைத் தேர்தலில் சசிகலா வின் உறவினர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் அரவக் குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கள்தான் மீண்டும் களமிறக் கப்படுவர் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், எந்தத் தொகுதியில் வேண்டு மானாலும் சசிகலாவின் உறவினர்கள் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.