ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் பகுதியிலுள்ள பாம்போர் என்னும் இடத்தில் அரசுக்குச் சொந்தமான 7 மாடி கல்விக்கழகக் கட்டடத்திற் குள் தீவிரவாதிகள் கடந்த திங்கட்கிழமை ஊடுருவினர். அதனையடுத்து அந்தக் கட்டடத்தைச் சுற்றி வளைத்த ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளுடன் கடந்த 60 மணி நேரமாக கடுமையாகப் போராடினர். அதில் புதன்கிழமை யன்று ஒரு தீவிரவாதி கொல்லப் பட்டான். இரண்டாவது தீவிரவாதி நேற்றுக் கொல்லப்பட்டான். மேலும் தீவிரவாதிகள் ஒளிந்திருக்கலாம் என்ற அச்சத்தின் பேரில் அந்தக் கட்டடம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள் இறங்கினர். தீவிரவாதிகள் யாரும் சிக்க வில்லை. ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்டடத்தில் 60 அறை கள் உள்ளதாகவும் அதனால் அக் கட்டடத்தை முழுமையாகச் சோதனை செய்து அதன் பாது காப்பை உறுதிப்படுத்துவதற்கு ஓரிரு நாட்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
ஸ்ரீநகர்: பாம்போர் தாக்குதல் முடிவுக்கு வந்தது
13 Oct 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Oct 2016 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!