தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் தேர்தல்; அடுத்த வாரம் தேதி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறி விக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் வாக் காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் இரு தொகுதிகளின் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் மதுரை மாவட்ட திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சீனிவேல் உடல் நலக் குறைவால் இறந்தார். இதனால் தற்போது மூன்று தொகுதிகளும் காலியாக உள்ளன.

சட்டமன்ற உறுப்பினர் மறைவு காரணமாக காலியாகும் தொகுதிக்கு ஆறு மாதங்களுக் குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் காரணமாக திருப்பரங் குன்றம் தொகுதிக்கு நவம்பர் 24ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இதையொட்டி மூன்று சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் அடுத்த வாரம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப் படலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறினார். இதற்கிடையே புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சட்ட மன்றத் தொகுதிக்கும் இந்த மூன்று தொகுதிகளுடன் சேர்த்து இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!