வேலூர்: சென்னை வியாபாரி ஒருவரின் முன்பு 10 ரூபாய் பணத்தைப் போட்டு இரண்டு லட்சம் ரூபாயை மர்மக் கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது. சென்னையைச் சேர்ந்தவர் பூவேந்திர தவே, 64. இவர், கிருஷ்ணகிரியில் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்ததில் வசூலான இரண்டு லட்சம் ரூபாயுடன் காரில் நேற்று வேலூர் வந்தார். அப்போது காரை ஓரிடத்தில் நிறுத்தி, பணப்பையை ஓட்டுநர் மோகனிடம் கொடுத்துவிட்டு அருகில் உள்ள தெருவில் பணம் வசூலிக்கச் சென்றார்.
அப்போது மூன்று பேர் கார் அருகில் வந்து ஓட்டுநர் மோகனிடம் "கீழே கிடக்கும் பணம் உங்களுடையதா," எனக் கேட்க, மோகன் கீழே குனிந்து 10 ரூபாய் நோட்டை எடுப்பதற்குள் மூவரும் காருக்குள் இருந்த பணப்பையுடன் தப்பினர். மோகன் 10 ரூபாயை எடுத்தபின் கொள்ளையர்கள் எனத் தெரியாமல் மூவருக்கும் நன்றி கூறினார். பின்புதான் பணப்பை கொள்ளை போனது தெரியவந்தது.