10 ரூபாய் ஆசை; ரூ.2 லட்சம் மாயம்

வேலூர்: சென்னை வியாபாரி ஒருவரின் முன்பு 10 ரூபாய் பணத்தைப் போட்டு இரண்டு லட்சம் ரூபாயை மர்மக் கும்பல் கொள்ளை அடித்துச் சென்றது. சென்னையைச் சேர்ந்தவர் பூவேந்திர தவே, 64. இவர், கிருஷ்ணகிரியில் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்ததில் வசூலான இரண்டு லட்சம் ரூபாயுடன் காரில் நேற்று வேலூர் வந்தார். அப்போது காரை ஓரிடத்தில் நிறுத்தி, பணப்பையை ஓட்டுநர் மோகனிடம் கொடுத்துவிட்டு அருகில் உள்ள தெருவில் பணம் வசூலிக்கச் சென்றார்.

அப்போது மூன்று பேர் கார் அருகில் வந்து ஓட்டுநர் மோகனிடம் "கீழே கிடக்கும் பணம் உங்களுடையதா," எனக் கேட்க, மோகன் கீழே குனிந்து 10 ரூபாய் நோட்டை எடுப்பதற்குள் மூவரும் காருக்குள் இருந்த பணப்பையுடன் தப்பினர். மோகன் 10 ரூபாயை எடுத்தபின் கொள்ளையர்கள் எனத் தெரியாமல் மூவருக்கும் நன்றி கூறினார். பின்புதான் பணப்பை கொள்ளை போனது தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!