திட்டம் தீட்டும் பாஜக: தவிக்கும் தேமுதிக

சென்னை: சில கட்சிகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருப்பதால் தமிழகத்தில் மூன்று தொகுதி களுக்கான தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க் கப்படுகிறது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நவம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. வழக்கம்போல் இம்முறையும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் அறிவிக் கப்பட்டுள்ளது. திமுகவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனித்து களம்காண இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாமகவைப் பொறுத்தவரையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் ஏற்கெனவே வெற்றிபெற்ற கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்துப் போட்டி என்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்துள்ள முடிவு, அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதி ருப்தியையும் புலம்பலையும் ஏற்ப டுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தேர்தல்களில் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலையில், இம்முறை கூட்டணியின்றி களமிறங்குவது பின்னடைவை ஏற்படுத்தும் என நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும், விஜய காந்தோ தன் முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!