மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம்பெண் படுகொலை

புதுடெல்லி: டெல்லி அருகே குர்கானில் உள்ள எம். ஜி. ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தில் 34 வயது பெண் ஒருவரை 26 வயது ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட பெண் பிங்கி தேவி எனவும் அவர் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான பெண் எனவும் தெரியவந்துள்ளது. அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பிங்கி தேவிக்கு ஜிஜேந்தர் என்ற ஆட்டோ ஓட்டுநர் நீண்ட நாட்களாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலை யில் நேற்று காலை 9.30 மணிக்கு ரயில் நிலையத்துக்கு சென்ற ஜிஜேந்தர் சிங்தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிங்கி தேவியை சரமாரியாகக் குத்தி யுள்ளார். உடனடியாக அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் பிங்கி தேவியை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் உயிரிழந்தார். கொலையாளி ஜிஜேந்தர் சிங்கை பாதுகாப்பு வீரர்கள் பிடித்து குர்கான் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலிசார் ஜிஜேந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!