அத்துமீறித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தின் மீது இந்தியா நடத்திய பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தானின் நான்கு ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. சென்ற வெள்ளிக்கிழமை இந்திய எல்லைக்குள் ஊடுருவி ராணுவ வீரர்களைத் தாக்கிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மன்ஜீத் சிங் எனும் இந்திய ராணுவ வீரரைக் கொன்று அவரது உடலைக் கொடூரமாகச் சிதைத்து வீசினர்.
இந்தக் கொடுஞ்செயலை இந்திய வீரர்கள் அறியாத வண்ணம் பாகிஸ்தானிய வீரர்கள் தீ உருவாக்கி மறைவு ஏற்படுத்திக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தது.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு வேளையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தானிய வீரர்கள் கெரன் பகுதியில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத் தினர். இந்திய ராணுவம் அதற்கு எதிர்த் தாக்குதல் நடத்திய போது இந்திய வீரர் ஒருவர் பலியானார். ஐந்து மணி நேரத்துக்கு விட்டுவிட்டு இருதரப்பிலிருந் தும் தாக்குதல்கள் தொடர்ந்த தாகக் கூறப்பட்டது.