சென்னை: தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5,451 பணி இடங்களுக்கான 'குழு-4' தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று 301 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வில் சுமார் 15 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதற்கிடையே திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் ஒருவரும் இந்த அரசு வேலைக் கான தேர்வை எழுதியிருக்கிறார்.
விழுப்புரம் அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்துவரும் சுப்பிரமணியனின் மகள் அகி லாண்டேஸ்வரிக்கும் மேல்தணிக்கலாம்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மெப்ஸில் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வரும் தமிழரசன் என்ற பிரதீப்புக்கும் நேற்றுக் காலை விழுப்புரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணப்பெண் அகிலாண் டேஸ்வரி உடனே தேர்வு எழுதப் புறப்பட்டார். அவருக்குத் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
அரசு வேலைக்குத் தேர்வு எழுதிய பொறியியல் பட்டதாரி அகிலாண்டேஸ்வரி. படம்: ஊடகம்