1,000 ரூபாய்க்கு பதில் 2,000 ரூபாய் - தைரியமான முடிவு எனத் தலைவர்கள் பாராட்டு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி எடுத்த தைரியமான முடிவு பாராட்டத்தக்கது என்று தலைவர் கள் பலரும் பாராட்டு தெரி வித்துள்ளனர். பிரதமரின் அதிரடி நடவடிக் கையை வரவேற்றுள்ள அதிபர் பிரணாப் முகர்ஜி, "பிரதமரின் இந்த நடவடிக்கையின் காரணமாக கணக்கில் வராத கருப்புப் பணம் வெளியே வரும். இதனை வரவேற் கிறோம். "ரூபாய் நோட்டுகள் செல் லாது என்று அறிவித்து உள்ளதால் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். அரசு அறிவித்தபடி வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்," என்று கூறினார்.

பாஜக தலைவர் அமித்ஷா தனது டுவிட்டரில், "கடினமான, ஆனால் சரியான நேரத்தில் இந்த நடவடிக்கைகளை எடுத்ததற்காக பாஜக சார்பில் மத்திய அரசுக்கும் மோடிக்கும் பாராட்டை தெரி வித்துக் கொள்கிறேன். "பயங்கரவாதத்தை ஆதரிக்கும் தேசவிரோத சக்திகள், போலி ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுபவர்கள் தற்போது நிலை குலைந்துள்ளனர்," என்று அவர் கூறியுள்ளார். ஆந்திர மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு, "கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவதற்கான மிக முக்கியமான முடிவு. இது ஊழலையும் அழிக்கும். இதை வரவேற்கிறேன்," என்று கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!