சென்னை: புதிய ரூபாய் நோட்டுகளில் இந்தியில் வாசகங் களை இடம்பெறச் செய்து மறை முகமாக இந்தி திணிக்கப்படுகிறது என்று தமிழ் அமைப்பு ஒன்று போர்க்கொடி உயர்த்தியிருக்கிறது.
இது தொடர்பாக வெளியிட்டு உள்ள அறிக்கையில், "இந்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய 500, 2000 ரூபாய் நோட்டு களில் பல மாற்றங்களைச் செய் துள்ளது. ஆனால் இதுவரை இல் லாதவாறு இந்த ரூபாய் தாள்களில் இந்தியில் எண்களைப் புகுத்தியுள் ளது. மேலும் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் செய்தியையும் இந்தி யில் மட்டுமே அச்சிட்டுள்ளது. இதற்கு எந்த ஆங்கில மொழி பெயர்ப்பும் அச்சிடப்படவில்லை," என்று தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பு புகார் கூறியிருக் கிறது. "இந்தியா என்பது பல மொழிகள் பேசும் தேசிய இனங் களின் கூட்டமைப்பு.
புதிய ரூபாய் நோட்டுகளில் இந்தி மொழியில் மட்டும் எண்களும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன என்று தமிழ் அமைப்பு ஒன்று எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளது. படம்: ஊடகம்