பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் காத்திருந்த ராகுல் காந்தி

புதுடெல்லி: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். அதை யடுத்து பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் வங்கிகளுக்குப் படையெடுத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றிச்செல்கின்றனர். இதற்கிடையே டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நேற்று பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தார்.

இதையறிந்த பத்திரிகை யாளர்கள் அங்கு வந்து அவரைப் படம் பிடித்தனர். அங்கிருந்தவர்களும் ராகுலுடன் 'செல்ஃபி' எடுத்துக் கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "ரூ. 4000 மட்டுமே வங்கியிலிருந்து எடுக்க முடியும். அதை வாங்குவதற்காகவே இங்கு வந்தேன். மக்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அந்தச் சிரமத்தைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் இங்கு வந்தேன். இதனை மோடி அரசும் உணரவேண்டும்," என்று ராகுல் காந்தி சொன்னார்.

வரிசையில் காத்திருந்த ராகுல். படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!