புதுடெல்லி: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். அதை யடுத்து பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் வங்கிகளுக்குப் படையெடுத்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றிச்செல்கின்றனர். இதற்கிடையே டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நேற்று பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தார்.
இதையறிந்த பத்திரிகை யாளர்கள் அங்கு வந்து அவரைப் படம் பிடித்தனர். அங்கிருந்தவர்களும் ராகுலுடன் 'செல்ஃபி' எடுத்துக் கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "ரூ. 4000 மட்டுமே வங்கியிலிருந்து எடுக்க முடியும். அதை வாங்குவதற்காகவே இங்கு வந்தேன். மக்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அந்தச் சிரமத்தைப் பகிர்ந்துகொள்வதற்காகவும் இங்கு வந்தேன். இதனை மோடி அரசும் உணரவேண்டும்," என்று ராகுல் காந்தி சொன்னார்.
வரிசையில் காத்திருந்த ராகுல். படம்: இந்திய ஊடகம்