புதுடெல்லி: நாடெங்கும் அன்றாட செலவுகளுக்கே போதிய அள வில் பணம் கிடைக்காமல் அவ திப்பட்டு வரும் மக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்கள், அங்காடி களைச் சூறையாடி உள்ளனர். மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளைச் செல்லாது என அறிவித்ததால் மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் இந்தப் பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு நடையோ நடை என அலைந்து வருகின்றனர்.
ஆனால் 3 நாட்களுக்கு மேல் ஆகியும் பல இடங்களில் இந்தப் பணத்தை மாற்ற முடியவில்லை. பொதுமக்களுக்கு ரூ.2,000 புதிய நோட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஏடிஎம்களில் ரூ.2,000க்கு ரூ.100 நோட்டுகள் சில்லறயாகக் கிடைக்கிறது.