செல்லா நோட்டுகள் அறிவிப்பால் சுமார் 7,000 கோடி ரூபாயை பதுக்கியுள்ள மாவோயிஸ்டு களுக்குக் கடும் பாதிப்பு ஏற்படும் என்று சட்டீஸ்கர் மாநில போலிசார் கூறியுள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் வன் முறைகளில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகள், பஸ்தார் பகுதி யில் மட்டும் 7,000 கோடி ரூபாய் அளவுக்குப் பதுக்கி வைத்துள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இனிமேல் அந்தப் பணத்தை அவர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர் களால் சட்டவிரோத செயல்களில் ஈடுபட இயலாத நிலை ஏற்பட்டு உள்ளதாக போலிசார் தெரிவித் தனர்.
ஆனால், வங்கிகள், நிதி நிறு வனங்கள், அஞ்சலகங்கள், வர்த் தக நிறுவனங்கள், ஏடிஎம்களில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி பணத்தைக் கொள்ளை அடிக்க வாய்ப்புள்ளதாகப் போலி சாருக்கு ரகசிய தகவல் கிடைத் துள்ளதாகவும் கூறப்படுகிறது.