`25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு இறந்தவரின் உடலை இறுதிச் சடங்கிற்காக இன்னொரு குடும்பத்தாரிடம் வழங்கிய மருத்துவமனை, பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கேரள மாநில நுகர்வோர் சமரச ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலப் பதிவுத் துறையில் மாவட்ட பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திரு புருசோத்தமன். கடந்த 2009ஆம் ஆண்டில் எர்ணாகுளம் மருத்துவ மையத் தில் சிகிச்சை பெற்ற அவர், அவ்வாண்டு டிசம்பர் 30ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
அவருடைய மூன்று மகள்களும் வேறு ஊர்களில் வசித்ததால் அவரது சடலம் மருத்துவமனையின் பிணவறையில் வைக் கப்பட்டது. தகவலறிந்த திரு புருசோத்த மனின் உறவினர்கள் 2010 ஜனவரி 1ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்று அவரது உடலைக் கேட்டபோது மருத்துவமனை இன்னொருவரின் உடலைக் கொடுத்தது.