தமது வங்கிக் கணக்கில் இம்மாதம் 4ஆம் தேதி திடீ ரென்று கோடானு கோடி பணம் வந்து சேர்ந்ததை அறிந்ததும் திக்குமுக்காடிப் போனார் பல்வீர்ந்தர் சிங். பஞ்சாப் மாநிலம் அமிர்த சரசைச் சேர்ந்த அவர் இவ் வளவு பணமும் எப்படி வந் தது? என்று அறியும் முன் னரே மகிழ்ச்சியில் திளைத் தார். பிரதமரின் ஜன் தன் திட் டத்தின் கீழ் சில மாதங் களுக்கு முன்புதான் அந்த வங்கிக் கணக்கை அவர் தொடங்கி இருந்தார்.
ஒரு வேளை பிரதமர் மோடியே இவ்வளவு பணத்தை தமக்கு போட்டு விட்டாரோ என்று கூட அவர் ஒரு கட்டத்தில் நினைத்தார். ரூ.98,05,95,12,231 என்று பதினோரு இலக்கத்தில் வெறும் எண்களாக அந்தத் தொகை இருந்ததால் அது எத்தனை கோடி என்று தெரிந்துகொள்ள தாம் கணக்கு வைத்திருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டி யாலாவுக்கு கடந்த 7ஆம் தேதி சென்றார். வழக்கமாக 3,000 ரூபாய் இருப்பு இருக்க வேண்டிய தமது கணக்கில் இவ்வளவு பெரிய தொகை வந்து சேர்ந்திருக்கும் விஷ யத்தையும் வங்கி அதிகாரி களிடம் அவர் கூறினார்.
திடீர் கோடீஸ்வரராகி ஏமாந்த பல்வீந்தர் சிங்கும் அவருக்கு வங்கி அனுப்பிய குறுஞ்செய்தியும். படம்: இந்திய ஊடகம்