காலணியின்றி 350 கி-.மீ. ஓடி சாதித்த நீலிமா

ஹைதராபாத்: ஆந்திராவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த நீலிமா புடோட்டா என்பவர் புடவை அணிந்தவாறு விஜயவாடா முதல் விசாகப்பட்டினம் வரை 350 கி.மீ. தூரம் காலணியின்றி ஓடி சாதனை படைத்துள்ளார். இவர் பெண்கள் உடல்நல விழிப்புணர் வுக்காக இந்த ஓட்டம் நிகழ்த் தியதாகக் கூறினார். இதற்கு முன்னர் அவர், இமயமலை ஏறிய அனுபவம் பெற்றவர்.

இந்த ஓட்டம் பற்றி கருத்துத் தெரிவித்த நீலிமா, "பெண்கள் தங்கள் உடல் நலத்தைப் பேணிக் காக்க மறந்துவிடுகின்றனர். அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருது வதில்லை. நமது முன்னோர் ஆரோக்கிய மான வாழ்க்கை வாழ்வ தற்கு ஏராளமான வழிமுறை களைக் கடைப்பிடித்து வந்தனர். ஆனால் நாம் அதையெல்லாம் மறந்து விட்டு சொகுசாக வாழ்கி றோம் என்ற பெயரில் ஆரோக்கி யத்தை இழந்து வருகிறோம். "நமது முன்னோர் கடைப் பிடித்த வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிப்பதன் வழி நாமும் ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்க வேண்டும். அதனை வழியுறுத்துவதற்கே இந்த நீண்ட ஓட்டத்தை மேற்கொண்டேன்," என்று கூறியுள்ளார் நீலிமா.

ஹைதராபாத்திலிருந்து விஜயவாடாவுக்கு காலணியின்றி ஓட்டப் பயணம் மேற்கொண்ட நீலிமா. படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!