ரூ.10 நாணயம் செல்லாது என வதந்தி

சங்கரன்கோயில்: ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்தாலும் வந்தது. இப்பொழுது அதைத் தொடர்ந்து நாளும் ஒரு தலைவலி தொடர்வதாக மக்கள் பலரும் புலம்பி வருகின்றனர். நெல்லை மாவட்டம், சங்கரன்கோயிலில் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என வதந்தி பரவியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தத் தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் சிறு, குறு வணிகர்கள், பெட்டிக் கடை உரிமையாளர்கள் என யாருமே பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பேருந்துகளில் அந்த நாணயத்தை வாங்க நடத்துநர்கள் மறுப்பதாகவும் மக்கள் கூறினர். ஆனால் திட்டமிட்டு யாரோ சில சமூக விரோதிகள் இந்த வதந்தியைப் பரப்பி உள்ளதாகத் தெரிகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!