மதுரை: மதுரையில் கைதான நான்கு பயங்கரவாதிகளையும் மேல் விசாரணைக்காக இன்று டிசம்பர் ஒன்றாம் தேதியன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி அனுமதி வழங்கினார். மதுரையில் அப்பாஸ் அலி, சம்சும் கரீம் ராஜா, முகம்மது அயூப் அலி, சம்சுதீன் என்ற கரு வாயன் ஆகிய நான்கு பயங் கரவாதிகளும் தேசியப் புலனாய்வு அமைப்பினரால் ஞாயிறன்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களை செவ்வாயன்று மதுரை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்கறிஞர் அர்ஜூன் முன்னி லையாகி கைதான நால்வரும் மைசூரு, சித்தூர், நெல்லூர், கொல்லம், மலப்புரம் ஆகிய 5 இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.