சென்னை: திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை நோயினால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாதிக்கப் பட்டார். அவரது உடல் சோர் வடைந்த காரணத்தால் ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனை யில் நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டார். மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு ஸ்கேன், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. அவருக்கு ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு கண்டு பிடிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வரு வதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மருத்துவக் குழு அளித்துவரும் சிகிச்சையில் கருணாநிதி குணம் அடைந்து வருகிறார். மு.க. ஸ்டா லின், செல்வி, கனிமொழி எம்.பி. ஆகியோர் கருணாநிதியை உடன் இருந்து கவனித்து வருகின்றனர். மு.க. அழகிரியும் மருத்துவ மனைக்கு வந்து செல்கிறார்.
கருணாநிதியுடன் கனிமொழி. கோப்புப்படம்