ரத்த சம்பந்த உறவு இல்லை... அர சியல் ஈடுபாடு இல்லை... மேடை யில் பேசியது இல்லை... செய்தி யாளர்களைச் சந்தித்தது இல்லை... இத்தனை 'இல்லை'கள் இருந் தாலும் தமிழக அரசு நிர்வாகமும் அதிமுக நிர்வாகமும் இப்போது சசிகலாவின் கையில். தொண்டராக இருந்து பதவியைப் பிடிக்கும் அரசியல் களத்தில் தோழியாகவே இருந்து இன்றைக்கு அதிகார மையமாக சசிகலா உருவெடுத்திருக்கிறார். காலம் காலமாகப் போராடும் கருணாநிதிக்குக்கூட இத்தனை எளிதில் ஆட்சியும் கட்சியும் ஒருசேர கைக்கு வந்ததில்லை.
இன்றைக்கு தமது ஒரு கையில் அரசாங்கமும் இன்னொரு கையில் அதிமுகவும் வந்து சேர்ந்திருப்பது சசிகலாவுக்குக் அடித்த யோகமா... அந்த யோகம் நீண்டகாலத் தோழமை யின் பரிசா... சசிகலா என்பவர் கடந்த திங் கட்கிழமை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங் கிய தோழி என்பது உலகறிந்தது. ஆனால், ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்குகள் செய்ததன் மூலம் எல்லோர் பார்வையும் அவர் பக்கம் திரும்பி உள்ளது. உறவினர்கள் செய்ய வேண்டிய இறுதிச்சடங்குகளைத் தோழியாக இருந்தால்கூட செய்யலாமா என்ற கேள்வி அக்காட்சியை காணொளி வாயிலாகக் கண்டவர்கள் மத்தி யில் எழுந்துள்ளது. அத்துடன் சசி கலாவின் பின்னணி பற்றி அறிந்து கொள்வதிலும் ஆர்வம் எழுந்துள்ளது.