இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத் தரவு பிறப்பித்துள்ளது. நெடுஞ் சாலைகளில் அமைந்துள்ள மதுக் கடைகளின், மதுக்கூடங்களின் உரிமங்களை 2017 மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கக் கூடாது என்று அந்த உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
அதாவது, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் எந்த மதுக்கடைகளும் இல்லை என் பதை மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும் என்று தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமை யிலான மூவர் நீதிபதிகள் குழு ஆணையிட்டுள்ளது. மாநில அரசுகளின் தலைமைச் செயலாளரும் போலிஸ் தலைமை அதிகாரியும் இந்நடவடிக்கை களை அமல்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'அரைவ் சேஃப்' என்ற லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் தொடுத்த பொதுநல வழக்கை அடுத்து உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது.