புரட்டிப் போட்ட புயல்: இலங்கை அகதிகள் கடும் அவதி சென்னை: வர்தா புயல்

சென்னையை மட்டுமல்லா மல் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமையும் புரட்டிப் போட்டுள்ளது. அங்குள்ள அகதிகள் அடிப்படை உதவி கள்கூட கிடைக்காமல் அவதிப்படுவதாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. வர்தா புயல் தாக்கம் காரணமாக அகதிகள் முகா மில் ஏறத்தாழ இருநூறு மரங்கள் விழுந்துள்ளன. இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், இருபது மின்கம்பங்களும் மின்மாற்றி ஒன்றும் சாய்க்கப்பட்டதால், முகாமில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் அகதிகள் முகாம் கடந்த சில நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது. தவிர குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. "கடந்த 1990ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த முகாமில் உள்ள 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 980 குடும்பங்களைச் சேர்ந்த 3,800 பேர் வசித்து வருகிறோம். "அகதிகளே தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளில் மா, பலா உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வந்தனர். கடந்த 12ஆம் தேதி வீசிய புயலால் பல மரங்கள் விழுந்துவிட்டன. இப்போது அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கிறோம்," என்கிறார் அகதிகள் முகாமின் தலைவர் சிவகுமார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!