அதிமுக பொதுச்செயலராகப் பொறுப்பேற்க வேண்டுமென சசிகலா நடராஜனை அக்கட்சி நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் அவரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கின்றனர். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த அதே மரியாதையையும் பணிவையும் வெளிப்படுத்துகின்றனர் அதிமுக நிர்வாகிகள். இந்தச் சந்திப்புகளின்போது சில சமயங்களில் சசிகலா துக்கம் தாளாமல் அழுகிறார்.
இதற்கிடையே பிரபல அச்சு, மின்னணு ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் சசிகலாவை நேரில் சந்திக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்புகள் தொடர்பான செய்திகளையும் புகைப்படங்களையும் அதிமுக தலைமையகமே அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வருகிறது. நேற்று முன்தினம் அரியலூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்த காட்சி. படம்: சதீஷ்