சென்னை: வர்தா புயல் காரணமாக தமிழகத்தில் மொத்தம் 28 ஆயிரம் ஹெக்டேர் அளவு பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். புயலால் வீசிய சூறாவளிக் காற்று, கனமழை காரணமாக 24 பேர் பலியானது கணக்கெடுப்பின் வழி தெரியவந்துள்ளதாக அவர் நேற்று முன்தினம் செய்தியாளர் களிடம் பேசுகையில் கூறினார். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ள தாகக் குறிப்பிட்ட அவர், மொத்தம் 70 ஆயிரம் குடிசைகள் முழுவதுமா கவும் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
"529 மாடுகள், 291 ஆடுகள், 33 ஆயிரம் கோழிகள் புயலால் உயிரிழந்துள்ளன. புயல் முன்னெச் சரிக்கையாக 104 முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டு, அவர் களுக்கு உணவு வழங்கப்பட்டது. "புயல் பாதித்த மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது," என்றார் அமைச்சர் உதயகுமார்.