சென்னை: நடிகர் ரஜினியின் மனைவி லதா நடத்தும் பள்ளியை முற்றுகையிட்டு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 'ஆசிரமம்' என்ற பெயருடைய அப்பள்ளி கிண்டி பகுதியில் உள்ளது. இங்கு 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 75 ஆசிரியர்கள், 26 வாகன ஓட்டுநர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், ஊழியர்களுக்கு பள்ளி நிர்வாகம் கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்றும் இதுகுறித்து பலமுறை முறையிட்டும் பலனில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்காமலும் ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகம் சமாதானப்படுத்தியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் காரணமாக பள்ளியில் பெரும் பரபரப்பு நிலவியது.
ரஜினி மனைவி நடத்தும் பள்ளி ஊழியர்கள் திடீர் போராட்டம்
21 Dec 2016 06:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Dec 2016 08:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!