பெங்களூர்: திருவள்ளுவரின் 2048வது பிறந்தநாளை முன் னிட்டு பெங்களூர் தமிழ்சங்கத் தின் சார்பில் பெங்களூரில் நேற்று திருவள்ளுவர் திருநாள் விழா மற்றும் தமிழர் - கன்னடர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. அல்சூர் ஏரி எதிரே நா.நீல கண்டன சதுக்கத்தில் அமைந் துள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். விழாவில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.தருண் விஜய் பேசினார்.
"தமிழர்கள் தங்கள் பண் பாட்டுக்கூறுகளை எந்தக் காலத் திலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. உலகின் உன்னதமான பண்பாடு தமிழர் களுடையது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் ஒரு மைப்பாடு காக்கப்பட வேண்டு மானால் திருவள்ளுவரின் திருக்குறளை வடஇந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று தருண் விஜய் கூறினார்.