சென்னை மெரினாவில் மீண்டும் போராட்ட மேகம்: அரசு தடை

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிக் குத் தலைமை தாங்கி கொள்கை களை முன்வைத்து தேர்தலில் வெற்றிபெற்று மக்களின் அனு மதியுடன், ஆதரவுடன் ஆட்சி பீடத்தில் முதல்வராக அமராத காரணத்தினால் தமிழக முதல் வரும் அதிமுக கட்சியினரும் இப்போது அன்றாடம் பயந்து பயந்து காலம் தள்ளுவதாகத் தெரிகிறது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் மறைவிற்குப் பிறகு அவர்கள் அரசியல் கட்சிகளைக் கண்டு பயந்து வந்த நிலை இருந்தது. ஆனால் இப்போது பொதுமக்களை நினைத்து குறிப்பாக மாணவர்களைக் கண்டு ஆட்சியாளர்கள் அச்ச மடையும் சூழ்நிலையை அண் மைய ஜல்லிக்கட்டுப் போராட்டம் கிளப்பிவிட்டுவிட்டதாக அரசி யல் கவனிப்பாளர்கள் தெரிவிக் கிறார்கள்.

மாநில மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒருவரின் கையில் மாநில நிர்வாகப் பொறுப்பு இல்லாததால் இத் தகைய ஒரு நிலையை ஏற்றுக் கொள்ள மக்கள் தயங்குகிறார் கள். தங்கள் தயக்கத்தை, வெறுப்பை எப்படிச் செயலாக மாற்றுவது என்பது தெரியாமல், தங்களுக்கு வழிகாட்ட ஒரு தலைவர் இல்லாமல் மக்கள் குழம்பிப்போயுள்ள நிலையில் அரசியல் பக்கம் மாணவர் களின் ஒருமித்த கவனம் திரும் பு வதாகக் கவனிப்பாளர் கள் கணிக்கிறார்கள்.

அண்மையில் மாணவர்கள் வெற்றிகரமான முறையில் நடத் திய ஜல்லிக்கட்டு அமைதிப் போராட்டம் அவர்களுக்கு ஊக்குவிப்பாக ஆகி இருக் கி றது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக இணையத்தளங் களைத் தங்களுக்குப் பக்கபல மாகக்கொண்டு மாணவர்கள் அரசியலில் ஒன்றுதிரளக்கூடும் என்ற அச்சம் ஆட்சியாளருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது கவனிப்பாளர்களின் கணிப்பு. இந்த நிலையில் சென்னைக் கடற்கரையில் பிப்ரவரி 12 வரை யாரும் கூடவோ போராட் டம் நடத்தவோ கூடாது என்று தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!