புதுடெல்லி: இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து வாரம் ரூ.50,000 பணம் எடுக்கலாம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று பிரதமர் மோடி புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறி பணமதிப்பு நீக்க நட வடிக்கை எடுத்தார். அத்துடன் வங்கியில் சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன் பிறகு கட்டுப்பாடுகள் தளரத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று மத்திய வங்கி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி பொதுமக்கள் வரும் 20ஆம் தேதியிலிருந்து தங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து வாரம் ரூ.50,000 பணம் எடுக்கலாம் என்று மத்திய வங்கி கூறியுள்ளது.