ஓபிஎஸ் அணியில் மதுசூதனன்

சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்படுவது உறுதியாகிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏற்கெனவே காலஞ்சென்ற ஜெயலலிதா உருவாக்கிய 'நால் வர் அணி'யில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி இருவரும் பன்னீர்செல்வத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரி வித்துள்ளனர். வைத்திலிங்கமும் விரைவில் இந்தப் பக்கம் வருவார் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களான பி.எச். பாண்டியன், மதுசூதனன் உள் ளிட்டோரும், ஐந்து எம்எல்ஏக் களும் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்தி ருப்பதால் சசிகலா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!