பன்னீரை ஆதரிக்கும் பதினோரு எம்எல்ஏக்கள்

சென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மேலும் இரண்டு சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து அவரை ஆதரிக்கும் எம்எல்ஏக்க ளின் எண்ணிக்கையானது 11 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் சரவணன், கோபால கிருஷ்ணன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்ததை யடுத்து இந்த அணியில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 8 ஆகவும் எம்பிக்கள் எண்ணிக்கை 12 ஆகவும் உயர்ந்தது. இந்நிலையில் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் செம்மலை நேற்று முன்தினம் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ சின்னராஜும் முதல்வர் அணிக்குத் தாவினார். இதற்கிடையே மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவும் முன்னாள் காவல்துறை தலைவருமான நட்ராஜும் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக மாறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!