சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடை பெற வாய்ப்புள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் (படம்) தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற திமுக இளையரணி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், தேர்த லுக்கு திமுகவினர் தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தி னார். தமிழக அரசியல் களம் பர பரப்பாக உள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற இருந்ததாக தகவல் வெளியானது.
இதில் சட்டப்பேர வையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அதில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது தவறான தகவல் என்று நேற்று ஸ்டாலின் செய்தி யாளர்களிடம் தெளிவுபடுத்தினார். இதையடுத்து அவர் இளையரணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.