சென்னை: கட்சி கொறடாவின் உத்தரவுக்கு எதிராக செயல்படும் பட்சத்தில் பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை இழக்க நேரிடும் எனத் தெரிய வந்துள்ளது. அதே சமயம் கொறடா உத்த ரவை ஏற்று நம்பிக்கை வாக் கெடுப்பில் அவர்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க அறவே வாய்ப் பில்லை என்றும் கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலர் சசிகலா அண்மையில் அக்கட்சி யின் சட்டப்பேரவை குழுத் தலைவ ராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
எனினும் சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக சட்டப் பேரவைக் குழுவின் புதிய தலை வராக அமைச்சர் எடப்பாடி பழனி சாமி ஒருமனதாகத் தேர்வு செய்யப் பட்டார். எனவே ஆட்சி அமைக்க தமக்கு அழைப்பு விடுக்குமாறு கோரி அவர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தார்.