சசிகலாவை சந்திக்க அனுமதி மறுப்பு; முதல்வர் பழனிசாமி தவிப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெங்களூரு சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலர் சசிகலாவை ஏன் சந்திக்கவில்லை என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. முதல்வராகப் பொறுப்பேற்ற அடுத்த நாளே எடப்பாடி பழனி சாமி பெங்களூரு செல்வார் எனக் கூறப்பட்டது. எனினும் நேற்று வரை அவர் சசிகலாவை நேரில் சந்திக்கவில்லை. இந்நிலையில் கர்நாடகா சிறைத்துறை விதித்துள்ள தடை காரணமாகவே எடப்பாடி பழனி சாமி = சசிகலா சந்திப்பு இது வரை சாத்தியமின்றிப் போன தாகக் கூறப்படுகிறது. சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திக்க தமிழக அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கும்படி கர்நாடக மாநில சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயண ராவுக்குத் தமிழக போலிஸ் டிஜிபி கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

விவரம்: தமிழ்முரசு இ-பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!