புதுக்கோட்டை: மீத்தேன் (ஹைட் ரோ கார்பன்) திட்டத்தை ரத்து செய்ய வலியு றுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முழு கடையடைப்பு நடை பெற்றது. இதையடுத்து அம்மாவட் டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது மத்திய அரசு. ஆனால் இத்திட்டத் தால் நீர்வளமும் நிலவளமும் பாதிக்கப்படும் என்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்றும் பொதுமக்கள் இடையே அச்சம் நிலவுகிறது. இதையடுத்து மீத்தேன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டை மக்கள் பரவலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நெடுவாசலில் நேற்று முன்தினம் போராட்டக் களத்தில் கூடியிருந்த பொது மக்கள் படம்: ஊடகம்