சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடுத்து அறி விக்கப்பட்டபடி, வெளிநாட்டு குளிர்பானங்களை தமிழக வணிகர்கள் புறக்கணித்துள்ள னர். மார்ச் 1 முதல் அக்குளிர் பானங்களை விற்க வணிகர்கள் சங்கம் தடையும் விதித்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி வீணடிக்கும் போராட்டத் தில் நேற்று வணிகர்கள் ஈடுபட்டனர். அப்போது மாநிலம் முழுவதும் மார்ச் 1ஆம் தேதிக்கு முன்பு வரை விற்பனை செய்யப் பட்டது போக மீதம் இருந்த குளிர்பானங்களை வணிகர்கள் கீழே கொட்டி புறக்கணித்தனர்.
குளிர்பானங்களை கீழே கொட்டும் வணிகர்கள் படம்: ஊடகம்