சென்னை: ஜல்லிக்கட்டுக்கு எதிராக மெரினாவில் நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகு அந்தப் போராட்டத்தில் வலியுறுத்தியபடி கோக், பெப்சி போன்ற வெளி நாட்டுக் குளிர்பானங்களின் விற் பனையை மார்ச் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்போவதாக வணிகர் சங்கங்கள் அறிவித்தன. அது தொடர்பான விழிப் புணர்வுக் கூட்டங்களையும் அவை நடத்தி வந்தன. இந்நிலையில், மார்ச் 1ஆம் தேதியான கடந்த புதன்கிழமை குறைந்த அளவிலான கடைகளில் மட்டும் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய் யப்பட்டன. அதை எதிர்த்து வணிகர் சங்கங்கள் விழிப்புணர்வுப் போராட் டங்களில் ஈடுபட்டன.
வெளிநாட்டு குளிர்பான எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற வணிகர் சங்க நிர்வாகிகள். படம்: தமிழக ஊடகம்