‘குற்றவாளிக்கு இன்னும் ஏன் அமைச்சர் பதவி’

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள அமைச்சரை இது வரை ஏன் பதவியில் இருந்து நீக்கவில்லை என உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். உ.பி. மாநிலத்தில் போக்கு வரத்து அமைச்சராக இருக்கும் காயத்ரி பிரஜாபதி தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் குற்றஞ் சாட்டியதன் தொடர்பில் அமைச்சர் பிரஜாபதி மீது பிணையில் வெளிவர முடியாத கைதாணை பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. இந்நிலையில் உ.பி. முதல்வர் அகிலே‌ஷிடம் ஆளுநர் ராம்நாயக், குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பிரஜா பதியை இன்னும் அமைச்ச ரவையில் வைத்திருப்பதற்கான காரணம் என்ன என விளக்கம் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!