புதுடெல்லி: டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 4,000 இளம் பெண்களை ஏமாற்றி, கடத்தி அவர்களைப் பட்டினி போட்டு விபசாரத்துக்காக மற்றவர்களிடம் விற்பனை செய்து, ரூ.250 கோடியை சம்பாதித்த தம்பதிகள் உட்பட 10 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். பெண்களின் நிறம், இளமை, அழகுக்கேற்ப அவர்கள் ரூ30.000 முதல் ரூ.200,000 வரை விற்கப் பட்டுள்ளனர். ஒவ்வொரு பெண்ணையும் விற்கும்போது லட்சக்கணக்கில் பணம் கிடைத்த தால் நாளடைவில் தம்பதிகள் நாட்டின் பல பகுதிகளிலும் முகவர்கள், தரகர்களை நியமனம் செய்து பெண்களைக் கடத்தி விற்கும் தொழிலை விரிவுபடுத்தி உள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த கணவன் - மனைவியான அபாக் உசேன், சாய்ரா பேகம் இருவரும் பெண் களைக் கடத்தி, விற்று சம்பாதித்த பணம் மூலம் வாங்கிய 18 பங்க ளாக்கள், 5 வாகனங்கள் உட்பட அவர்களின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதில் ஜெய்ப்பூரில் உள்ள ரூ. 35 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு, பகவன் நகரில் உள்ள ரூ.12 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவும் அடங்கும். அபாக்-சைரா தம்பதிகள், இவர்களின் இரு நிர்வாகிகள், ஒரு ஓட்டுநர், ஐந்து கூலியாட்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.