புதுடெல்லி: இந்தியாவின் விமானம் தாங்கிக் கப்பலின் போர்த்திறன் உத்தி தோல்வி அடைந்துள்ளது என்று சீனா வின் ராணுவ வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார். இந்தச் சூழ்நிலையில் சீனா தனது சொந்த விமானம் தாங்கி கப்பல் திட்டத்தை விரிவுபடுத்து வது அவசியம் என்றார் அவர். சீனாவின் கடற்படை தற் போது இரண்டாவது விமானம் தாங்கிக்கப்பலுடன் ஆயத்த மாகி வருவதை அந்த நிபுணர் சுட்டிக்காட்டியதாகவும் 'இந் தியா டுடே' வெளியிட்ட செய்தி குறிப்பிட்டது. சீனா ராணுவத்தின் கடற் படை சாதன ஆய்வு கழகத்தின் லியூ குய், "அண்மையில் 'ஐஎன்எஸ் விராட்' விமானம் தாங்கிக் கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் இந்தியா வுக்கு ஒரே ஒரு விமானம் தாங்கிக்கப்பல் மட்டுமே எஞ் சியது," என்றார்.
இந்தியாவின் 'விராட்' விமானம் தாங்கிக் கப்பல். படம்: கோப்புப் படம்