ஏழை மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு: பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு, ஏழை மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்பட வில்லை என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். ஒரு மாதமாக, அத்தியாவசியப் பொருட்களை கொள் முதல் செய்வதில், தற்போதுள்ள பினாமி அரசு காலதாமதத்தை ஏற்படுத்தி கடும் தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் சாடியுள்ளார். "எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில், ரேசன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு என்றைக்குமே இருந்தது இல்லை. அதற்கு நேர்மாறாக, தற்போதைய பினாமி அரசு, ஏழை மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல், பொது வினியோகத் துறையை பலவீனப்படுத்துவதை அறிய முடிகிறது," என ஓ.பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!