வீட்டில் எரிந்தது ஒரு விளக்கு; மின் கட்டணமோ ரூ.8.73 லட்சம்

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஒரு பல்பு மட்டுமே எரிந்த வீட்டுக்கு மாத மின் கட்டணமாக ரூ.8.73 லட்சம் செலுத்தும்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார். நெல்லூர் மாவட்டம், தோட்ட பல்லி கூடு கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி ரவீந்தர். இவர் அண்மையில் சிறிய வீட்டைச் சொந்தமாகக் கட்டி, இதற்கான மின் இணைப்பும் பெற்றார். பின்னர் தனது வீட்டில் ஒரேயொரு பல்பு மட்டும் பொருத்தி இரவில் பயன்படுத்தி வந்தார். அதற்கு கட்டணமாக கடந்த மாதங் களில் ரூ.85 வரை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கான மின் கட்டணத்தை கண்டதும் ரவீந்தர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். ஒரே ஒரு பல்பு பயன்பாட்டுக்கு 1,26,517 யூனிட் மின்சாரம் செலவாகி இருப்பதாகவும் அதற்கு ரூ.8,73,696 செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. இதனால் குழப்பம் அடைந்த ரவீந்தர் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று ஒரு பல்பு பயன்பாட்டுக்கு லட்சக்கணக்கில் மின் கட்ட ணம் எப்படி வரும் எனக் கேள்வி எழுப்பி புகார் அளித்தார். அதன் அடிப்படை யில் விசாரணை நடத்தி தவறைக் கண்டுபிடிப்பதாக மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!