தமிழ்ப் பாடத்தில் அரியானா மாணவர்கள் முதலிடம்

இந்தியாவின் அஞ்சல் துறைக்கு நடந்த தேர்வில் அரியானாவைச் சேர்ந்த பல மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதை தேர்வில் பங்கேற்ற தமிழக மாணவர்கள் கண்டு பிடித் துள்ளனர். அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வு முடிவுகள் செவ் வாயன்று வெளியானது. அரியானா மாணவர்களிடம் தொலைபேசியில் பேசிய பின்னர் இதில் முறைகேடு நடந்திருக்கும் என்ற ஊகம் ஊர்ஜிதமானதால், மதுரையில் இருந்து தேர்வெழுதிய 40 மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது பற்றி எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியாது என்று அஞ்சல் துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!