அருள்வாக்கு, காணொளி: அரசு ஊழியர் இடைநீக்கம் நாமக்கல்: நாமக்கல்லில் அருள் வாக்குக் கூறுவதாக ஒரு பெண்ணை ஆபாச காணொளி எடுத்த அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் முள்ளுக் குறிச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த ராஜேந்திரன் என்பவர் அரிய கவுண்டம்பட்டி சண்டி கருப்புசாமிக் கோவிலில் பூசாரியாகவும் உள்ளார். இவர் மீது திருச்செங்கோடு கொல்லப்பட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி கடந்த 13ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு கொடுத்தார். தன் கண வருக்கு 2013 முதல் உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து சிலரின் பரிந்துரையின் பேரில் தான் முள்ளுக்குறிச்சி வருவாய் ஆய்வாளரின் உதவியாளரான ராஜேந்திரனிடம் சென்றதாக மனுவில் அவர் தெரிவித்தார்.
கோவிலில் பூசாரியான அரசு ஊழியர் ராஜேந்திரன். படம்: தமிழக ஊடகம்