ஓபிஎஸ் அணியுடன் நெருங்கும் எம்எல்ஏக்கள்: சசி அதிர்ச்சி

சென்னை: சசிகலா அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்தவர் களிடம் திடீர் நெருக்கம் பாராட்டி வருவதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. இதனால் சிறையில் உள்ள சசிகலா கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படு கிறது. அதிமுக தற்போது 3 அணி களாகப் பிளவுபட்டுள்ளது. இவற் றுள் சசிகலாவுக்கும், பன்னீர் செல்வத்துக்கும் இடையேதான் கடும் மோதலும் போட்டியும் நிலவுகிறது. இரு தரப்புமே இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதில் முனைப்பாக உள்ளன. இந்நிலையில், இரு தினங்க ளுக்கு முன்பு வரை எதிரும் புதிருமாக இருந்த இருதரப்பு எம்எல்ஏக்களும் இப்போது திடீ ரென ஒருவருக்கொருவர் நெருக் கம் பாராட்டி வருகின்றனர். குறிப் பாக சட்டப்பேரவையில் இரு தரப்பினருமே சகஜமாகப் பேசுவ தும் சிரிப்பதும் என பழைய நட்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!